திருக்குளிர்த்தி
வைகாசிப்பூரணை திருக்குளிர்த்தி தினமான வரும் பொருட்டு ஆரம்பமாகும் கண்ணகி அம்மன் உற்சவம் பல்வேறு பாரம்பரியங்களுடன் இடம்பெறுகின்றன. கதவு திறத்தலோடு ஆரம்பமாகி ஊர்வலம் செல்லுதல், கல்யாணக்கால் வெட்டுதல் வட்டுக்குற்றல், திருக்குளிர்த்தி பாடுதல் என எட்டுத்தினங்கள் நடைபெறும் எட்டுக்குடியினரதும் பூஜைகள் எட்டுத்தினங்கள் நடைபெறுவது பழங்காலம் தொட்டு இருந்து வருகின்றது. தினமும் பூசைப் பெட்டிகள் குடிசார் வண்ணக்கர்கள் இல்லத்திலிருந்து ஊர் வீதிகளின் ஊடாக ஆலயத்தை வந்தடையும் மரபு இன்னமும் நிலவுகின்றது. கதவு திறந்ததும் ஊர் முழுவதுமே புனிதமான ஓர் புதுப்பொலிவினைப் பெறும் மக்கள் மச்சம் மாமிசம் தவிர்த்து வீடு வாசல்களில் புனிதம் பேணி வீதிகள் பெருக்கி மெருகூட்டி பத்தினித் தெய்வத்தின் அருள் வேண்டி நிற்பர் ஐந்தாம் நாள் அம்மன் ஊர் சுற்று இடம்பெறும் இத்தினத்தில் ஆலய பூசகர் பெண்னைப் போல் அலங்கரிக்கப்பட்டு கண்ணகித் தாயை சுமந்து சென்று ஊர் வீதியெல்லாம் வலம் வரும் நாளாகும். ஊர் வலம் வரும் போது மக்கள் தமது வாசல் படலைகளில் திருவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து அம்மன் தரிசனம் பெறுவர். இவ் ஊர் வலத்தில் அம்மனின் ஆசிவேண்டி வரும் பக்கதகோடிகளின் காட்சியானது அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கும்.
ஆறாம் நாள் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெறும் பூசகருக்கு அம்மன் கனவில் அறிவிக்கும் இடத்தில் உள்ள பூவரசம் கிளையினையே காலாக வெட்டி எடுப்பர். பூசகர் அன்றைய தினம் விரதம் இருந்து கல்யாணக்கால் வெட்டினை நடாத்துவார். வெட்டப்பட்ட கால் பூசை விதிமுறைக்கு அமைய கிரியைகளுக்கு உற்படுத்தப்பட்டு பூசகரும் அவரது சகாக்களும் தோளில் தாங்கிய வண்ணம் ஆலயம் கொண்டு வருவர். பின்னர் கல்யாணக்கால் நாட்டப்பட்டு அலங்கரிக்கப்படும்
ஏழாம் நாள் திருவிழாவன்று விநாயகப்பானை வீதி வலம் வரும் வட்டுக்குற்றுதல் இடம்பெறுவதுடன் கண்ணகி வழக்குரை பாராயணம் நிறைவுபெறும். எட்டாம் நாள் இருதி தினத்தன்று திருக்குளிர்த்தி தினமாகும். இது கோலவன் கொலையுண்ட செய்தியால் கோபவேசம் கொண்ட கண்ணகியின் வெய்மையை தணிக்கும் நோக்கில் திருக்குளிர்த்தி நீராட்டு நிகழ்ச்சியும் திருக்குளிர்த்தி பாடல்களும் இடம் பெற்று நிறைவாக திருக்கதவு அடைக்கப்படும். கடந்த காலங்களைப் போன்றே இவ்வருடமும் இவ்வாலய உற்சவம் அதிசிறப்பாக எட்டுத்தினங்கள் நடைபெறவிருப்பது இவ்மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டுக்கே கிடைத்துள்ள நற்பேறுகளில் ஒன்றே எனலாம்.
கே.திருநாவுக்கரசு
கல்முனை
ஆறாம் நாள் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெறும் பூசகருக்கு அம்மன் கனவில் அறிவிக்கும் இடத்தில் உள்ள பூவரசம் கிளையினையே காலாக வெட்டி எடுப்பர். பூசகர் அன்றைய தினம் விரதம் இருந்து கல்யாணக்கால் வெட்டினை நடாத்துவார். வெட்டப்பட்ட கால் பூசை விதிமுறைக்கு அமைய கிரியைகளுக்கு உற்படுத்தப்பட்டு பூசகரும் அவரது சகாக்களும் தோளில் தாங்கிய வண்ணம் ஆலயம் கொண்டு வருவர். பின்னர் கல்யாணக்கால் நாட்டப்பட்டு அலங்கரிக்கப்படும்
ஏழாம் நாள் திருவிழாவன்று விநாயகப்பானை வீதி வலம் வரும் வட்டுக்குற்றுதல் இடம்பெறுவதுடன் கண்ணகி வழக்குரை பாராயணம் நிறைவுபெறும். எட்டாம் நாள் இருதி தினத்தன்று திருக்குளிர்த்தி தினமாகும். இது கோலவன் கொலையுண்ட செய்தியால் கோபவேசம் கொண்ட கண்ணகியின் வெய்மையை தணிக்கும் நோக்கில் திருக்குளிர்த்தி நீராட்டு நிகழ்ச்சியும் திருக்குளிர்த்தி பாடல்களும் இடம் பெற்று நிறைவாக திருக்கதவு அடைக்கப்படும். கடந்த காலங்களைப் போன்றே இவ்வருடமும் இவ்வாலய உற்சவம் அதிசிறப்பாக எட்டுத்தினங்கள் நடைபெறவிருப்பது இவ்மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டுக்கே கிடைத்துள்ள நற்பேறுகளில் ஒன்றே எனலாம்.
கே.திருநாவுக்கரசு
கல்முனை